ஊஞ்சலில் அருளிய தஞ்சம்மன் – பக்தர்கள் மனம் கவர்ந்த தாலாட்டு சேவை!

வேலூர் கலஸ்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தஞ்சம்மன் அம்மனுக்கு, ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிறப்பு ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தாலாட்டு’ சேவை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் குறித்து ஆலய தர்மகர்த்தா P. பத்மராஜ் தெரிவித்ததாவது, “ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அன்னை தஞ்சம்மனுக்கு ஊஞ்சல் மற்றும் தாலாட்டு சேவை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மனநிறைவு மற்றும் ஆன்மிக அமைதியை பெறுகின்றனர். குறிப்பாக பங்குனி அமாவாசை நாளில் நடைபெறும் பூஜைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு,” என்றார்.

இந்த ஊஞ்சல் சேவை பூஜையில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அன்னை தஞ்சம்மன் அருளைப் பெற ஆராதனை செய்தனர். அம்மனுக்கு அலங்காரங்கள் செய்து, பாரம்பரிய முறையில் ஊஞ்சல் ஆட்டி, தாலாட்டு பாடல்களுடன் நடைபெற்ற இந்த வழிபாடு பக்தர்களை ஆனந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
பூஜையின் போது, குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என பக்தர்கள் மனமார வேண்டிக் கொண்டனர். பக்தர்களின் திரளான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அமாவாசை சிறப்பு சேவை, ஆலய வளாகத்தில் ஆன்மீக சூழலை உருவாக்கியது.

City Today News 9341997936

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.